சமூகத்தின் அடிமட்டத்தில் பணியாற்றுங்கள்

பா.ஜ.கவை சேர்ந்த மேயர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு நேற்று குஜராத்தில் துவங்கியது. இம்மாநாட்டை வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, “சர்தார் வல்லபாய் படேல் மேயராகதான் தனது அரசியல் பயணத்தை துவங்கினார். சிறந்த பாரதத்துக்கான அவரது பாதையை நாம் பின்பற்றி, வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும். நாட்டின் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களும் இப்போது பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக மாறி வருகின்றன. அந்த பகுதிகளில் தொழில் கட்டமைப்பை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சிறு, குறு விற்பனையாளர்களுக்கு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து பயிற்சி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். மேயர்கள் சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்து பணியாற்ற வேண்டும். மக்களுக்கு சிறந்த வசதிகள் வழங்கப்பட வேண்டும். தங்கள் பகுதிகளின் வளர்ச்சிக்கு நன்கு திட்டமிட வேண்டும்” என ஆலோசனைகள் கூறினார்.