குற்றவாளிகளின் வீடுகள் இடிப்பு

மத்தியப் பிரதேசம் ரேவா மாவட்டத்தில் 16 வயது மைனர் சிறுமி ஒருவர் ஆறு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஒரு நண்பருடன் கோயிலுக்குச் சென்ற சிறுமியை அங்கு வந்த 6 இளைஞர்கள் மிரட்டினர். இருவரையும் பிடித்து அருகில் உள்ள அருவிக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த இளைஞர்கள் சிறுமியை பலாத்காரம் செய்தனர். அதன்பின், அலைபேசியை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட மூன்று குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இரண்டு சிறார்களும் அடங்குவர். மேலும் மூன்று குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை காவல்துறை தேடி வருகிறது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளின் சட்டவிரோத கட்டடங்களை இடித்துத்தள்ளினர். மீதமுள்ளவர்களின் வீடுகளிலும் சோதனை முடிந்த பின் அவை இடிக்கப்படும் என்று தெரிவித்தனர்.