ஆ. ராசா மீது வழக்கு

தர்மபுரியில் நடந்த, வடதமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் பயிற்சி முகாமில் பங்கேற்று பேசிய தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் சீனிவாசன், விஷ்வ ஹிந்து பரிஷத்தின், 60ம் ஆண்டு நிறைவு விழா, 2024ல் நடக்கவுள்ளது. அதற்குள் தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஒரு லட்சம் ஆதரவாளர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹிந்துக்கள் மனம் புண்படுத்தும்படி தொடர்ந்து பேசி வரும், தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீது, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும். நீதிமன்ற உத்தரவுப்படி, பொது இடங்களிலுள்ள தலைவர்களின் சிலைகள் அகற்றப்படாமல் உள்ளன. கோயில்கள் முன் உள்ள ஈ.வெ.ராவின் சிலைகளை அகற்ற வேண்டும். பள்ளிகளில் நடக்கும் மதமாற்றம் குறித்து விசாரணை குழு அமைக்க வேண்டும்” என்று கூறினார்.