மாணவர்களின் மது பிரச்சனைக்கு தீர்வு

டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படங்கள் அதிர்ச்சியளிக்கிறது. பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில் மது விற்பனைக்கே தடைவிதிக்க நேரிடும்” என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றியமைக்க கோரிய வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.