ராகுல் வரலாற்றைத் தெரிந்துகொள்ளட்டும்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பா.ஜ.க பூத் அளவிலான நிர்வாகிகளிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பாரத் ஜோடோ யாத்திரைச் செல்லும் ராகுல் காந்தி வெளிநாட்டு பிராண்ட் டி ஷர்ட் அணிந்து கொண்டு யாத்திரை செல்கிறார். பாரதத்தை ஒன்றிணைப்பதற்காக பாரத ஒற்றுமை பயணம் போவதாக சொல்லும் அவர், முதலில் தேசத்தின் வரலாற்றை நன்றாக தெரிந்துகொள்ள வேண்டும். நான் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கும், ராகுலுக்கும் அவர் நாடாளுமன்றத்தில் பேசியதை நினைவுபடுத்த விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் பாபா, பாரதம் ஒரு தேசமே இல்லை என்றார். நீங்கள் எந்தப் புத்தகத்தில் இதைப் படித்தீர்கள்? லட்சக்கணக்கான மக்கள் உயிர்த் தியாகம் செய்து உருவாக்கிய தேசம் இது. ராகுல் பாரதத்தை ஒன்றிணைப்பதற்காக யாத்திரை போவதாக சொல்கிறார். முதலில் அவர் தேசத்தின் வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும். வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சி வேலை செய்வதாக சொல்கிறது. அவர்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே வேலை செய்கிறார்கள்” என்று பேசினார்.