பாரதத்துக்கு பிரான்ஸ் ஆதரவு

பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயங்கரவாதிகளான மொகிதீன் ஔரங்கசீப் ஆலம்கிர் மற்றும் அலி காஷிப் ஜான் ஆகியோரை உலகளாவிய பயங்கரவாதிகளாக அறிவிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாரதம் வைத்த கோரிக்கைக்கு பிரான்ஸ் நாடு ஆதரவு தந்துள்ளது. வரும் செப்டம்பர் 14ல் பாரதம் வரவுள்ள பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் கேத்தரின் கொலோனாவின் முதல் விஜயத்தை முன்னிட்டு இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கரவாதிகள், 2016ல் பதான்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தியது, 2019ல் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டது, ஜம்மு காஷ்மீருக்குள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஊடுருவவைத்து பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவது, பயங்கரவாதிகளை ஒருங்கிணைப்பது போன்ற செயல்களில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.