மாணவனுக்கு நீதிகேட்டு பேரணி

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் மாணவர் பால மணிகண்டன். தனது மகளை விட பால மணிகண்டன் நன்றாக படிப்பதால் அவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்துகொடுத்தார் சகாயராணி விக்டோரியா என்ற கிறிஸ்தவ பெண். இதனால், மாணவன் பால மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் மாணவர் பெற்றோரிடையே மிகுந்த சோகத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், மாணவன் பால மணிகண்டன் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி மாணவனின் பெற்றோர் காரைக்கால் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கியுள்ளனர். இதனிடையே, காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி சார்பாக மாணவன் மணிகண்டனுக்கு நீதிகேட்டு அமைதி பேரணி நடைபெற்றது. இதில், எழுநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்பகுதி மக்கள் கடையடைப்பு செய்து தங்கள் உணர்வினை வெளிப்படுத்தினர்.