சேவாபாரதி இலவச மருத்துவமனை

சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக சேலத்தில் “சேவாபாரதி கிளினிக்” என்ற பெயரில் இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை மையம் நேற்று துவங்கப்பட்டது. கருங்கல்பட்டி சேலம் குகை செங்கல்பட்டு 4வது தெருவில் (வீரலட்சுமி வித்யாலயா பள்ளி எதிரில்) துவக்கப்பட்டது. இந்த மருத்துவ மையம் செயல்படும். நான்கு மருத்துவர்கள் வந்து மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் ஆலோசனையின்படி குறைந்த விலையில் மருந்துகளும் வழங்கப்படும். முதற்கட்டமாக இந்த மருத்துவமனை மாலை 4 மணிமுதல் இரவு 8 வரை செயல்பட உள்ளது. பின்னர் படிப்படியாக பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் வந்து மருத்துவ ஆலோசனைகள் வழங்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.