இலக்குகளை அடையும் வரை தொடரும்

ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடந்த வருடாந்திர பொருளாதார கூட்டத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள குடிமக்களை பாதுகாக்கவே படைகள் அனுப்பப்பட்டன. ராணுவ நடவடிக்கையை தொடங்கியது நாங்கள் அல்ல. நாங்கள் அதற்கு ஒரு முடிவு கட்டவே முயற்சிக்கிறோம். உக்ரைனில் மாஸ்கோ ஆதரவு கொண்ட தனி பகுதிகளை பாதுகாப்பதற்காகவே படைகள் அனுப்பப்படுகின்றன. ரஷ்யாவுடன் கிரீமியாவை இணைத்ததன் தொடர்ச்சியாக 2014ம் ஆண்டில் இருந்தே உக்ரைன் படைகளுடனான மோதல் நடந்து வருகிறது. தொன்பாஸ் பகுதியில் உள்ள மக்களுக்கு உதவுவது எங்களது கடமை. அதனை இறுதிவரை போராடி நாங்கள் நிறைவேற்றுவோம். மேற்கத்திய நாடுகளின் பொருளாதார, நிதி, தொழில்நுட்ப தாக்குதல் ஆகியவற்றை ரஷியா தடுத்துள்ளது. இந்த தடைகளை எதிர்கொண்டு, ரஷ்யாவின் இறையாண்மை வலுப்படுத்தப்பட்டு உள்ளது. நாங்கள் எதையும் இழக்கவில்லை. இழக்கவும் மாட்டோம். ரஷ்யாவில் பொருளாதார சூழல் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது, நுகர்வோர் விலை பணவீக்கம் குறைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மையும் குறைவாகவே உள்ளது. எங்களை முன்னேற தடுக்கும் ஒவ்வொன்றையும் புறந்தள்ளி விட்டு வளர்ச்சிக்கான வலிமையை நாங்கள் அடைவோம். ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றுக்கு விலை நிர்ணயம் செய்ய மேற்கத்திய நாடுகள் முயன்றது முட்டாள்தனமான செயல். எங்களுக்கு போதுமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்” என கூறியுள்ளார்.