கோயில் சிலைகள் உடைப்பு

திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோயிலின் தெற்கு வாசல் வெளியே விநாயகர் சிலை ஒன்று உள்ளது. நேற்று காலை பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு சென்றபோது, விநாயகர் சிலையின் இடது கை பகுதியை சில மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தி இருப்பது தெரிய வந்தது. அதேபோல், இதே நாளில் தென்னம்பாளையத்திலும் சக்தி விநாயகர் கோயில் வெளியே உள்ள விநாயகர் சிலையின் கை பகுதியும் உடைக்கப்பட்டு இருந்தது. ஒரே நாளில் நடத்தப்பட்ட இந்த இரு வேறு சிலை உடைப்பு சம்பவங்கள் குறித்து தகவலறிந்து வந்த திருப்பூர் காவல்துறையினர், அங்கு பொருத்தப்பட்டிருந்த ‘சிசிடிவி’ கேமரா பதிவை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர். விநாயகர் சிலை உடைக்கப்பட்டதை அறிந்து ஹிந்து முன்னணியினர் அங்கு திரண்டு மர்ம நபர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.