வ.உ.சிக்கு பிரதமர் புகழாரம்

விடுதலைப் போராட்ட வீரர் வ உ சிதம்பரம் பிள்ளை பிறந்த நாளில் அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்த அவரது டுவிட்டர் செய்தியில் “மாமனிதர் வ உ சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளில் அவருக்கு புகழாரம் சூட்டுகிறேன். விடுதலைப் போராட்டத்திற்கு அவரின் மகத்தான பங்களிப்புக்கு நாடு கடன்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சிக்கும் தற்சார்பாக மாறுவதற்கும் அவர் மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளார். அவரது சிந்தனைகள் நமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன.” என தெரிவித்துள்ளார்.