ரோஹிங்கியாக்கள் வெளியேற வேண்டும்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதால், தேசத்தின் பாதுகாப்பு பெரிய கவலையாக மாறியுள்ளது. ரோஹிங்கியாக்கள் எங்களுக்கு ஒரு சுமை. அவர்களை திருப்பி அனுப்ப விரும்புகிறோம் என கூறியுள்ளது பாரத நாடு அல்ல, நமது அண்டை நாடுகளுல் ஒன்றான, முஸ்லிம் பெரும்பான்மை நாடாக விளங்கும் வங்கதேசம்தான்.

இதுகுறித்து ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியளித்த வங்கதேசபிரதமர் ஷேக் ஹசீனா, “ ரோஹிங்கியாக்கள் ஏங்கள் நாட்டிற்கு பெரும் பிரச்சனையாக இருக்கின்றனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பாரதத்தின் உதவியை நாடியுள்ளோம். எங்களுக்கு இது ஒரு பெரிய சுமை.  மனிதாபிமான அடிப்படையில் ரோஹிங்கியாக்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட அனைத்தையும் வழங்குகிறோம் ஆனால் அவர்கள் எவ்வளவு காலம் இங்கு இருப்பார்கள்? அவர்களில் பலர் போதைப்பொருள், பெண் கடத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்கள் இங்கிருந்து திரும்பிசெல்வது எங்களுக்கு மிகவும் நல்லது” என கூறியுள்ளார்.

தற்போது இதற்காக பாரதத்தின் உதவியை கோரியுள்ள ஷேக் ஹசீனா, இதற்கு முன், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியின் வங்கதேச விஜயத்தின் போது, ​​ரோஹிங்கியா அகதிகளை மியான்மருக்கு திருப்பி அனுப்புவதற்கு  சீனாவிடமும் உதவி கோரினார்.

வங்கதேசத்தில் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களால் வங்கதேசத்தில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடத்தல், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, கொள்ளை, தங்கம் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், ஒப்பந்த கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ரோஹிங்கியாக்கள் ஈடுபட்டுள்ளனர் என பங்களா டிரிப்யூன் உள்ளிட்ட பல வங்கதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 கடந்த ஆண்டுகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ரோஹிங்கியாக்கள் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் ரோஹிங்கியாக்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இது மிகவும் கடினமாக உள்ளது என வங்கதேச பாதுகாப்பு முகமைகள் தெரிவித்துள்ளன. போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறையின் மெட்ரோ பிராந்திய துணை இயக்குநர் முகுல் ஜோதி சக்மா, “சிட்டகாங்கில் இப்போது ரோஹிங்கியாக்கள் ஒரு பெரிய கவலையாக மாறியுள்ளனர். போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்” என குற்றம் சாட்டியுள்ளார்.

இத்தகைய ரோஹிங்கியாக்களுக்கு பாரதத்தில் இடமளிக்க வேண்டும் என ஆதரவு கொடுத்துவரும் சில அமைப்புகளும் கட்சிகளும் இதற்கு என்ன சொல்லப்போகின்றன?