மூன்று வன்முறையாளர்கள் கைது

கள்ளக்குறிச்சி:கணியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக 3 பேரை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கணியாமூர் பள்ளியில் பிளஸ் 2 மாணவி இறந்தது தொடர்பாக ஜூலை மாதம் 17ல் சில தீய சக்திகளின் ஏற்பாட்டின் பேரில் வன்முறை போராட்டம் நடத்தப்பட்டது. இந்த வன்முறையில் ஈடுபட்டவர்களை காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ‘வாட்ஸ் ஆப்’ மற்றும் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு கைது செய்து வருகின்றனர். அவ்வகையில், கலவரத்தின்போது காவல்துறை வாகனம் மற்றும் காவலர்கள் மீதும் கற்களை வீசி தாக்கியதாக சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த வளையமாதேவியைச் சேர்ந்த ஹரிகரன், பார்த்திபன் ஆகியோரும் பள்ளியின் சொத்துகளை சேதப்படுத்திய தலைவாசல் அடுத்த சார்வாய்புதுாரைஸ் சேர்ந்த சக்திவேல் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.