நாடாளுமன்றம்தான் சரி நீதிமன்றமல்ல

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினையை பரிசீலிக்க சரியான இடம் நாடாளுமன்றமே தவிர நீதிமன்றம் அல்ல என கூறி உங்கள் விளம்பரங்களுக்காக நாங்கள் வழக்கை விசாரிக்க முடியாது என மனுதாரரை நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும் சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தனர்.