பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முனீருல் இஸ்லாம் என்ற புலம்பெயர்ந்த தொழிலாளி மீது நேற்று காலை பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அவர், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு கருதி அப்பகுதியை காவல்துறையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். கடந்த மாதம் பீகாரைச் சேர்ந்த ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி கொல்லப்பட்டார். கடூரா கிராமத்தில் பீகாரைச் சேர்ந்த மேலும் இரண்டு தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதில் அவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.