மமதாவுக்கு பதில்

ஆர்.எஸ்.எஸ்காரர்கள் அனைவருமே மோசமானவர்கள் அல்ல; அவர்களில் பா.ஜ.கவை ஆதரிக்காதவர்களும் உள்ளனர்’ என, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, காங்கிரஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம்., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த சூழலில், மமதா பானர்ஜி  கருத்து குறித்து கருத்துத் தெரிவித்த பா.ஜ.க தரப்பினர், ‘எங்களுக்கு மம்தா சான்று அளிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என, கூறியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் கூறப்பட்ட கருத்தில், ‘அரசியல் வன்முறையில் சாதனை படைத்து வரும் திரிணமுல் காங்கிரஸ் அரசு, அவற்றை சரி செய்வதில் கவனம் கொள்ளட்டும்’ என கூறப்பட்டுள்ளது.