தலைக்கு விலை

தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ தலைமறைவாக இருந்து வரும் தேச விரோதிகள், பயங்கரவாதிகள் உள்ளிட்ட 5 நபர்கள் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு நிதி அளிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி, நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 25 லட்சமும் சோட்டா ஷஹில் தலைக்கு ரூ. 20 லட்சம், அனீஸ் இப்ராஹிமுக்கு ரூ. 15 லட்சம், ஜாவேத் சிக்னாவுக்கு ரூ. 15 லட்சம் மற்றும் டைகர் மேமன் பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. 15 லட்சம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.