அஸ்ஸாமில் பயங்கரவாதிகள் கைது

அல் கொய்தா இந்திய துணைக் கண்டம் (ஏ.கியு.ஐ.எஸ்) மற்றும் அன்சருல்லா பங்களா டீம் (ஏ.பி.டி) ஆகிய முஸ்லிம் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய அக்பர் அலி மற்றும் அபுல் கலாம் ஆசாத் ஆகிய இரண்டு பயங்கரவாதிகளை அஸ்ஸாம் காவல்துறையினேர் பார்பெட்டா மாவட்டத்தில் கைது செய்துள்ளனர். அஸ்ஸாமில் இதுவரை இந்த இரண்டு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில், பர்பேட்டா மாவட்டத்தில் உள்ள அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஷைகுல் ஹிந்த் மஹ்முதுல் ஹசன் ஜாமியுல் ஹுதா இஸ்லாமிய அகாடமி என்ற மதரஸாவை காவல்துறையினர் இடித்துத் தள்ளினர். சமீபத்தில்  கைது செய்யப்பட்ட இந்த இரண்டு பயங்கரவாதிகளுக்கும் இந்த மதரசாவுக்கும் தொடர்பு உள்ளது. மேலும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த மதரசா முதல்வர் மஹ்முனூர் ரஷீத்தையும் காவலர்கள் கைது செய்தனர் என பர்பேட்டா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமிதவ சின்ஹா ​​தெரிவித்தார்.