ஜார்கண்டில் ஒரு லவ் ஜிஹாத்

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டம் ஜருதிஹ் பகுதியைச் சேர்ந்த ஹிந்துவான சஞ்சீவ் சிங்கின் மகள் அங்கிதா குமாரி. இவரை, பக்கத்து வீட்டில் வசித்து வரும் முகமது ஷாருக் உசைன் என்ற முஸ்லிம் நபர் காதலிப்பதாகக் கூறி தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்தான். அவனது காதலை அங்கிதா ஏற்க மறுத்துவிட்டார். இதனால், அங்கிதா மீது கடும் ஆத்திரம்கொண்ட ஷாருக் உசைன் அங்கிதாவை கொல்ல திட்டமிட்டான். சில நாட்களுக்கு முன்பு அங்கிதா வீட்டில் நள்ளிரவு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, தனது பின்புறம் நெருப்பு எரிவதை கண்டு திடுக்கிட்டு விழித்தார். தனது உடல் தீயில் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து கதறினார். பக்கத்துக் அறையில் தூங்கிக் கொண்டிருந்த பெற்றோர், தீயை அணைத்து அங்கிதாவை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அங்கிதா மரனமடைந்தார். இதுகுறித்து கவல்துரையில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில், முகமது ஷாருக் உசைன், அங்கிதாவின் அறைக்குள் நுழைந்து பெட்ரோலை ஊற்றி தீவைத்த விவரம் தெரியவந்தது. இதையடுத்து, காவலர்கள் ஷாருக் உசைனை கைது செய்தனர்.