உ.பி’யில் ஒரு லவ் ஜிஹாத்

உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத்தில் வசிக்கும் ஒரு ஹிந்து பெண்ணிடம் சந்த் பாபு என்ற முஸ்லிம் நபர், தன்னை ஒரு ஹிந்துவாகவும் டாக்டர் விஷால் என்றும் கூறிக்கொண்டு அறிமுகமானார். அந்தப் பெண்ணுடன் நெருங்கி பழகி, பாலியல் பலாத்காரம் செய்தார். பிறகு தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். அந்த பெண்ணை முஸ்லிம்மாக மாறச்சொல்லி கட்டாயப்படுத்தினார். அப்போதுதான் அந்த பெண்னுக்கு அவர் மருத்துவரும் அல்ல, ஹிந்துவும் அல்ல என்பதும் சந்த் பாபு ஏற்கனவே திருமணமானவர், இரண்டு குழந்தைகளின் தந்தை என்பதும் தெரியவந்தது. இதனிடையே அந்தப் பெண்ணை முராதாபாத்தில் இருந்து பரேலிக்கு வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று நகரில் உள்ள ‘மன்னாட் விருந்தினர் மாளிகையில்’ அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினார் அந்த முஸ்லிம் நபர். அந்த பெண் எப்படியோ காவல்துறைக்கு போன் செய்து சம்பவம் குறித்து தகவல் கொடுத்தார். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அந்த பெண்ணை மீட்டனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் சந்த் பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.