காவல் அதிகாரியின் சுயரூபம்

தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், “இங்கே அமர்ந்து இருப்பவர் இன்று டி.எஸ்.பியாக பதவி உயர்வு பெற்று வந்து இருக்கிறார். ஒரு காலத்தில், எஸ்.ஐயாக இருந்தபோது எனக்கு செக்யூரிட்டியாக இருந்தவர். அவர் என்ன வேண்டுமானாலும் செய்ய கூடிய ஆற்றல் பெற்றவர். அவருக்கு இருக்கும் திறமை என்னவென்றால், அவரால் ஒருவரை குற்றவாளியாக மாற்றவும் முடியும். குற்றவாளியை அதில் இருந்து காப்பாற்றவும் முடியும். அவர் எங்களோடு வளர்ந்தவர். எனவே, இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது” என கூறி அந்த காவல்துறை அதிகாரியின் செயல்பாடுகள், சார்புத்தன்மை போன்றவற்றை எல்லாம் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார். ஏற்கனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் சூழலில், தற்போது வெளியாகி பரபரப்பாக பகிரப்பட்டு வரும் அமைச்சரின் பேச்சு அடங்கிய இந்த வீடியோ, மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.