உலகை வழி நடத்தும் கல்விக்கொள்கை

மத்திய பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “ஒரு நாடு சிறந்த நிலையை அடைய சிறந்த ஆளுமைகள் தேவை. வெறுமனே மலைகள், ஆறுகளால் எந்த ஒரு நாடும் சிறந்த நாடாக மாறிவிடாது. தேசிய கல்விக்கொள்கை பாரதத்தின் ஆன்மாவை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கையில் பாரதத்தின் கலைகள், கலாச்சாரம், தாய்மொழி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது பாரத மாணவர்களை மட்டுமில்லாமல் நிச்சயம் வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்கும். முந்தைய கல்விக் கொள்கை ஒரு மாணவரை குறிப்பிட்ட துறையில் மட்டுமே நிபுணராக மாற்றியது. ஆனால், புதிய தேசியக் கல்விக் கொள்கை மாணவரை சிறந்த மனிதனாக மாற்றிக்காட்டும். இதன்மூலம் மாபெரும் பாரதத்தை உருவாக்குவதற்கான விதைகளை பிரதமர் மோடி தூவியுள்ளார். அது அடுத்த 20 வருடங்களில் ஆலமரமாக உருவெடுக்கும், உலகம் முழுவதையும் வழிநடத்தும்” என்று கூறினார்.