தற்கொலைப்படை பயங்கரவாதி கைது

பாரதத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப்படை பயங்கரவாதியை ரஷ்யா கைது செய்துள்ளது. ‘பாரதத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த மிக முக்கிய உயர்பதவி வகிக்கும் ஒருவருக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல் நடத்த இந்த பயங்கரவாதி சதித் திட்டம் தீட்டியிருந்தான். அந்த நபர் துருக்கியில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத குழுவின் தலைவர்களில் ஒருவரால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தேர்வு செய்யப்பட்ட நபர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது’ என ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (எப்.எஸ்.பி) தெரிவித்துள்ளது.