சீதா தீர்த்தத்தை சீரமைக்க கோரிக்கை

ராமேஸ்வரத்தில் உள்ள புனித தீர்த்தங்களில் மிக முக்கியமான தீர்த்தமான ‘சீதா திருத்தம்’. அது தற்போது பராமரிப்பின்றி குப்பை கிடங்காக மாறி வருவது, பக்தர்களை வேதனை அடையச் செய்துள்ளது. இந்த தீர்த்தத்தை உடனடியாக சீரமைத்து தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா கூறுகையில், “தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து புனித தீர்த்தமாட பக்தர்கள் ராமேஸ்வரம் வருகின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் சீதா தீர்த்தம் குப்பை கிடங்காக மாறி இருப்பது பக்தர்களை வேதனைப்பட வைக்கிறது. எனவே உடனடியாக தீர்த்தம் சீரமைக்கப்படாவிடில் இந்து முன்னணி சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும்.” என்று தெரிவித்தார்.