உள்நாட்டு ராணுவ தளவாடங்கள்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராணுவ தளவாட சாதனங்கள் மற்றும் கருவிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லியில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தார். எதிர்கால காலாட்படை சிப்பாய்க்கான சாதனம் (F-INSAS), புதிய தலைமுறை கண்ணிவெடியான நிபுன், மேம்பட்ட திறன்கொண்ட தானியங்கி தகவல் தொடர்பு சாதனங்கள், ரெக்கார்டிங் வசதியுடன் கூடிய டவுன்லிங்க் கருவி, மேம்படுத்தப்பட்ட ரேடியோ ரிலே, மினி ரிமோட்லி பைலட்டட் ஏரியல் சிஸ்டம், பீரங்கிகளுக்கான மேம்படுத்தப்பட்ட குறி வைக்கும் சாதனம், காலாட்படை பாதுகாப்பு வாகனம் மற்றும் அதிநவீன தெர்மல் இமேஜர்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த சாதனங்கள் இந்திய ராணுவத்தின் செயல்பாட்டு ஆயத்த நிலையை மேம்படுத்தும். நவீன தொழில்நுட்பத்திலான கட்டமைப்பு வசதி மேம்பாடு, நமது ராணுவ படைகள் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.