வாஜ்பாய்க்கு அஞ்சலி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மூன்று முறை நாட்டின் பிரதமர் பதவியை வகித்த பெருமைக்கு உரியவர். பா.ஜ.கவை சேர்ந்த அவர் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டு 16ம் தேதி தனது 93வது வயதில் காலமானார். அவரது நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு டெல்லியில் அமைந்துள்ள சதைவ் அடல் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும், வாஜ்பாயின் வளர்ப்பு மகளான நமீதா கௌல் பட்டாச்சார்யாவும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.