6 கோடி மூவர்ணக்கொடி செல்பி படங்கள்

பாரத சுதந்திரத்தின் 76வது ஆண்டைத் தொடங்கும் வேளையில், தேச விடுதலையின் அமிர்தப் பெருவிழா என்னும் 75 வார கவுண்ட் டவுன் மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட இல்லந்தோறும் மூவர்ணக்கொடி இயக்கத்துடன் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது. இந்த இயக்கத்தில் மாலை 4 மணி வரை 6 கோடி செல்பி படங்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது பாரத  வரலாற்றில் சிறப்புமிக்க தருணமும் மகத்தான சாதனையுமாகும். இந்த சாதனை பற்றி குறிப்பிட்டுள்ள கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, கடமை உணர்வு கொண்ட பாரத தேசத்தவர்களின் ‘தேசம் முதலில்’ என்ற கூட்டு முயற்சியை இது பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார்.