சதித் திட்டம் முறியடிப்பு

தேசத்தின் சுதந்திரதினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் டெல்லி காவல்துறையினர் உதவியுடன் கனடாவைச் சேர்ந்த ஆர்ஷ் டல்லா அமைப்பைச் சேர்ந்த 4 பேரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குர்ஜந்த்சிங் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஆதரவுடன் பயங்கரவாத சதி செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். இவர்களிடம் இருந்து பி 86 வகையைச் சேர்ந்த 3 கையெறி குண்டுகள், ஒரு சக்தி வாய்ந்த வெடிகுண்டு, இரண்டு 9 எம்.எம். ரக கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் கூடிய 40 குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் மிகப்பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என பஞ்சாப் டி.ஜி.பி கௌரவ் யாதவ் தெரிவித்தார்.