அரசியல்வாதி சர்ச்சை கருத்து

கடந்த 2017ம் ஆண்டு ஒரு கும்பலால் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நடிகை குறித்து பேசுகையில், அந்த சம்பவம் உண்மையாக இருந்தால், ஒரு பெண்ணாக அவரது வாழ்க்கையில் அடைந்த இழப்பு மிகப்பெரியதாக இருக்கலாம். ஆனால், அவர் வாழ்வின் மற்ற பகுதிகளில் பலனடைந்துள்ளார். அவருக்கு நடிக்க இப்போது பல படங்கள் வருகின்றன. அந்த பிரச்சனைக்குப் பிறகு அதனால் அவருக்கு எந்த நஷ்டமும் ஏற்பட்டதாக நான் நினைக்கவில்லை” என்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். மேலும், இந்த செய்தியாளர் சந்திப்பின் போது தனது கருத்துக்களை எதிர்த்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களை ஜார்ஜ் கடுமையாக சாடினார். இப்படி ஜார்ஜ் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் 8வது குற்றவாளியாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார்.