இதுதான் கம்யூனிஸ்டுகளின் தேசப்பற்று

கேரளாவில் ஆளும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவராகிய ஆர். ஜெயராஜன் தனது வீட்டில் மார்க்சிஸ்ட் கட்சிக் கொடிக்கு கீழே தேசியக் கொடியை கட்டி வைத்துள்ளார். இது தேசியக்கொடியை அவமானப்படுத்தும் செயல் என்பதுடன் இதற்கு தண்டனையும் உண்டு. மேலும், திருவனந்தபுரத்தில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் நினைவாக தியாகிகள் தூண் நிறுவப்பட்டுள்ளது. 75 வது சுதந்திர விழாவை முன்னிட்டு தேசத்தின் முக்கிய இடங்கள் எல்லாம் நன்றாக அலங்கரிக்கப்பட்டு வண்ண விளக்குகளால் மிளிர்கின்றன. ஆனால் இடதுசாரிகள் ஆட்சி செய்யும் கேரளத்தில் தியாகிகள் நினைவுத் தூணில் அதற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் உள்ளது. இதுதான் கம்யூனிஸ்டுகளின் தேசப்பற்று.