சுதந்திரத்தை கொண்டாட ஊக்குவிப்பு

ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதிவரை சுதந்திரத்தின் அம்ரித மஹோத்சவம் மற்றும் வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றுவது என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, அதன் அதிகாரபூர்வ சமூக ஊடகங்களில் தேசியக்கொடியை காட்சிப்படுத்தியுள்ளது. மேலும், “சுதந்திரத்தின் அம்ரித மஹோத்சவத்தை அனைவரும் கொண்டாடுங்கள். ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றுங்கள். தேசிய சுயமரியாதையை உயர்த்துங்கள்” என்று சங்கம் தனது டுவிட்டர் பதிவில் மக்களை ஊக்குவித்துள்ளது.