பொய்யான வாக்குறுதி தரமாட்டேன்

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ள பாரத வம்சாவளியினரான ரிஷி சுனக், பி.பி.சி.க்கு அளித்த ஒரு பேட்டியில், “நான் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் பதவிக்கான (பிரதமர் பதவி) போட்டியில், பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெறுவதைக்காட்டிலும் தோல்வியை ஏற்பேன். மிகக் கடினமான குளிர்காலத்தில் இந்த நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். எனது முதல் விருப்பம் எப்போதும் மக்களிடம் இருந்து பணத்தை எடுக்கக்கூடாது என்பது. வாழ்வாதார நெருக்கடியால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு உதவ வேண்டும். குளிர் காலத்தில் கூடுதல் உதவிகள் வழங்குவதற்கான தார்மீகப் பொறுப்பை உணர்கிறேன். கொரோனா பொது முடக்க காலத்தில் நான் செய்த சாதனைகளை வைத்து மக்கள் முடிவுக்கு வரட்டும். மக்கள் விலைவாசி, எரிசக்தி கட்டண உயர்வால் கவலைப்படுவதை அறிந்துள்ளேன். நான் பிரதமர் பதவிக்கு வந்தால் மிகவும் ஆதரவு தேவைப்படும் குடும்பங்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துவேன்” என்று கூறினார்.