கெஜ்ரிவால் ஒரு பொய்யர்

இலவச வாக்குறுதிகளை அளித்து வாக்குகள் கோரப்படுவது தேசத்தின் வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது என பிரதமர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். உச்ச நீதிமன்றமும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளது. இதனையடுத்து,  இலவச அறிவிப்புகளை அள்ளிவிட்டு அதனை முறையாக நிறைவேற்றாமல் தட்டிக் கழிக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை பல பா.ஜ.க தலைவர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பணக்காரர்களுக்கு வரிகளை தள்ளுபடி செய்து ஏழை மக்கள் மீது வரிகளை சுமத்துவதாக அரவிந்த் கெஜ்ரிவால் ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பொய்யர். பல மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், அவர் டெல்லியில் அதனை நிறைவேற்றினாரா? டெல்லியில் உள்ள அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுகிறது என்று அவர்கள் கூறுகின்றனர். அப்படியெனில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் தங்கள் குழந்தைகளை அங்கு சேர்க்காதது ஏன்?” என கேள்வி எழுப்பினார்.