தமிழகத்துக்கு ரூ. 4,758 கோடி

மத்திய அரசு அதன் தொகுப்பிலிருந்து வரி பகிர்ந்தளிப்பாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ. 1.16 லட்சம் கோடியை விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு விடுவிக்கப்பட்ட நிதி ரூ. 4,758 கோடி ஆகும். முன்னதாக, மத்திய அரசு ரூ.58,332 கோடியைத்தான் வரி பகிர்ந்தளிப்பாக விடுவிக்க வேண்டியிருந்தது. ஆனால், தற்போது இரண்டு தவணைகளையும் சேர்ந்து ஒரே நேரத்தில் விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வரிப் பகிர்வு தீர்மானிக்கப்படுகிறது. மாநில அரசுகள் தங்கள் முதலீடுகள் மற்றும் செலவினங்களை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த வரிப் பகிர்ந்தளிப்பு வழங்கப்படுகிறது.