துணை குடியரசுத் தலைவரானார் ஜக்தீப் தன்கர்

துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 6 ம் தேதி துணை ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அதில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் களமிறங்கிய ஜக்தீப் தன்கர் வெற்றி பெற்றார். துணை குடியரசுத் தலைவராக ஜக்தீப் தன்கர் பதவியேற்று கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில், பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க தலைவர் நட்டா, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.