150 நினைவுச் சின்னங்களில் தேசியக்கொடிகள்

மத்திய கலாசார அமைச்சகத்தின் அறிக்கையின்படி, தேச சுதந்திரமடைந்த 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில், ‘வீடுகள்தோறும் தேசியக்கொடி’ என்ற பிரச்சார இயக்கத்தின் கீழ், நாடு முழுவதும் தொல்பொருள்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 150 நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களில் தேசியக் கொடிகள் ஏற்றப்படும். நாடு முழுவதும் உள்ள 750 நினைவுச் சின்னங்களில் தூய்மை பிரச்சார இயக்கம் தொடங்கப்படும் மற்றும் அனைத்து மையங்களிலும் கட்டணமில்லா இலவச நுழைவு அனுமதி ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 15 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்ரித் மஹோத்ஸவத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த நிகழ்வுகளில் உள்ளூர் மக்கள் துணையுடன் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தப்படும். அதில்,  மரம் நடும் இயக்கங்கள், பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விரிவுரைகள், மருத்துவ முகாம்கள் மற்றும் குழந்தைகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.