நாளுக்கு நாள் வளர்ச்சி

திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாரதம் வலிமையுடன் முன்னேறி சென்றுகொண்டிருக்கிறது. 5 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் இருந்தால், எதிர்கொள்ள தயாராக உள்ளோம். தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளின் நோக்கம், அவர்களின் குடும்பத்தை வளர்ப்பதுதான். அவர்களின் முழுநேர வேலையே ஊழல் செய்வது மட்டும்தான். ஆனால், மக்களுக்கான திட்டங்கள் தான் பா.ஜ.கவின் குறிக்கோள். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.கவை பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் அண்ணாமலை தலைமையில் பா.ஜ.க நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறது. அவரைப்பார்த்து எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, அனைத்துக் கட்சிகளும் பயப்படுகின்றன. 4 பேரை வைத்துக்கொண்டு பா.ஜ.க இயங்கிக் கொண்டிருக்கிறது என மறைந்த முன்னாள் பிரதமர் நேரு முன்பு ஒருமுறை கூறினார். ஆனால் இன்று மொத்த தேசமும் எங்கள் பின்னால் ஆதரவாக உள்ளது” என்றார்.