பா.ஜ.கவில் இணைந்த மீனவ மக்கள்

தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான இளைஞர்களும் மாற்றுக் கட்சியினரும் பா.ஜ.கவில் ஐக்கியமாகி வருகின்றனர். அவ்வகையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் நடந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவரும், ஊராட்சி மன்றத் தலைவருமான அகோரம் தலைமை வகித்தார். கட்சியில் இணைந்தவர்களுக்கு மாவட்டத் தலைவர் அகோரம் பொன்னாடை அணிவித்து பேசியபோது, ‘பாரத பிரதமர் நரேந்திரமோடி மீனவர்களின் நலனின் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். பூம்புகார் மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிய விரைவில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், முருகன் உள்ளிட்டோர் பூம்புகாருக்கு வருகை தர உள்ளனர். 75வது சுதந்திர தினத்தை வீடுகள்தோறும் தேசியக் கொடி ஏற்ற கொண்டாட வேண்டும் என்று கூறினார்.