1.25 லட்சம் விநாயகர் சிலைகள்

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவையில் 6,000 விநாயகர் சிலைகள், திருப்பூரில் 5,000 விநாயகர் சிலைகள்  உட்பட, தமிழகம் முழுதும், 1.25 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. கொரோனா காரணமாக, இரண்டு ஆண்டுகளுக்கு பின், விநாயகர் ஊர்வலம் நடக்க உள்ளதால் இதனை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். வரும் ஆகஸ்ட் 31 முதல், செப்டம்பர் 4ம் தேதி வரை விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட உள்ளோம். செப்டம்பர் 3ம் தேதி, திருப்பூர் மாநகரம், ஈரோடு, பொள்ளாச்சி, 4ம் தேதி கோவை, நீலகிரியில் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. திருப்பூர் விசர்ஜன ஊர்வலத்தில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையும், கோவையில், பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜாவும் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை ‘பிரிவினை வாதத்தை முறியடிப்போம் தேசிய சிந்தனையை வளர்ப்போம்’ என்ற கோஷத்துடன் கொண்டாடப்பட உள்ளோம்” என கூறினார். முன்னதாக, வரும் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் சூழலில், இந்து முன்னணி சார்பில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி, பண்ருட்டி, கடலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், காகிதக்கூழ், கிழங்கு மாவு போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலை பாகங்களை பொருத்தும் பணியும் வர்ணம் பூசும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.