வீடுதோறும் மூன்று வண்ணம்

சுதந்திர தினத்தின் 75வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக வரும் 13 முதல் 15ம் தேதி வரை இல்லந்தோறும் தேசியக் கொடியேற்ற பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அந்தப் பணிக்கு எழுச்சியூட்டும் வகையில் விஜயபாரதம் வார (05-08-20220) இதழில் “வீடுதோறும் மூன்று வண்ணம்” என்ற பாடலை எழுத்தாளர் எஸ்.எஸ்.ராகவேந்திரன் எழுதியுள்ளார். இந்தப் பாடலை ஹரிகதை சொற்பொழிவாளர் சிந்துஜா சந்திரமௌலி பாடியுள்ளார். அதற்கான காணொலி வெளியீடு அண்மையில் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியொன்றில் இந்தக் காணொலியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட, பா.ஜ.க மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பெற்றுக்கொண்டார்.