ஒரு கோடி வீடுகளுக்கு தேசிய கொடி

தேசத்தின் சுதந்திர தினம், ஆகஸ்ட் 15ல் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.75வது சுதந்திர தினத்தையொட்டி ‘வீடுகள் தோறும் தேசியக் கொடி’ என்ற திட்டத்தின் கீழ், இம்மாதம், 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் சுதந்திர தின விழாவில் ஈடுபடுத்தவும், அனைவரின் வீடுகளிலும் தேசிய கொடியை பறக்கவிடவும், தமிழகத்தில் உள்ள 1 கோடி வீடுகளுக்கு, தமிழக பா.ஜ.க சார்பில் தேசிய கொடிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், அக்கட்சியின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர்களை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக பள்ளி, கல்லுாரிகளில் சுதந்திர தின பேச்சு போட்டி, சைக்கிள் பேரணி, நடைபயணம் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.