மத பிரசாரகர்களை சிறைபிடித்த பொதுமக்கள்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவை அடுத்த சின்னசேரி ஊராட்சியில் ஹிந்துக்கள் வசித்து வருகின்றனர்.அங்கு இரு தினங்களுக்கு முன், பகல் 12 மணிக்கு சுமார் 15 பேர் ஒரு கிறிஸ்தவ மதமாற்ற கும்பல் ஒன்று வந்தது.அவர்கள், ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து கடவுளை சென்றடையும் வழி என்பது குறித்து புத்தகத்தையும், மதமாற்றம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்‌.இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி இளைஞர்களும் பொதுமக்களும் திரண்டு கட்டாய மதமாற்றம் செய்த கும்பலை மடக்கி சிறைபிடித்தனர்.இவர்கள் இதற்கு முன்பு மூன்று முறை இதே பகுதிக்கு வந்து மத மாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.வீட்டில் ஆண்கள் இல்லாத நேரத்தில் பெண்களிடம், குழந்தைகள் நன்றாக படிப்பதற்கும், குடுபத்திற்கு தேவையான வசதிகளை செய்து தருவதாகம் ஆசைகாட்டி வந்துள்ளனர்.இது குறித்து பள்ளிகொண்டா காவலர்களுக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர்.ஆனால் காவலர்கள் உடனடியாக வரவில்லை.அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, வேலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து, சிறைபிடித்து வைத்திருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த மதமாற்ற கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அதிகாரிகள் கூறினார்.அதனையடுத்து சிறைபிடித்தவர்களை கிராமமக்கள் விடுவித்தனர்.முன்னதாக மதமாற்றத்தில் ஈடுபட்ட 15 பேருக்கும் அந்தப் பகுதி இளைஞர்கள் ஹிந்து முறைப்படி விபூதி பூசி, பொட்டு வைத்தனர்.அவர்கள் வந்த வாகனத்திற்கும் ஹிந்து முறைப்படி பூஜை செய்து, பொட்டு வைத்தனர்‌.இதனால் அந்த பகுதியில் சுமார் நான்கு மணி நேரம் பரபரப்பு நிலவியது.