ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி

எண்ணூர் பஜாரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘தமிழகத்திற்கு 7 லட்சம் கோடி கடன் வந்துள்ளது.இந்த கடன் சதவீத உயர்வுதான் ஆட்சியாளர்கள் காட்டுகின்ற, கட்டமைக்க நினைக்கின்ற வளர்ச்சி.தமிழகத்தில் 10 ஆயிரம் அரசுப் பள்ளிக்கூடம் இடியும் நிலையில், சீரமைக்க முடியாத நிலையில் உள்ளது.அந்தந்த பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களிடம் பணம் வாங்கி சீரமைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அடுத்து அவர்களிடமே ஊதியம் பெற்றுக் கொள்ளும்படி கூறுவீர்களா?இவ்வளவு சிக்கல் இருக்கும்போது கருணாநிதி நினைவாக 80 கோடி ரூபாய்க்கு கடலுக்குள் பேனா வைக்கிறேன் என்பது சரியா? அப்படியெனில் அண்ணாதுரைக்காக கடலுக்குள் பொடி டப்பா சிலை, எம்ஜிஆர்நினைவாக தொப்பி சிலை,, ஜெயலலிதாவுக்கு மேக்அப் பெட்டி சிலையும் கடலுக்குள் வைப்பீர்களா? உங்களுக்கெல்லாம் (கருணாநிதிக்கு) சமாதி வைத்ததே அதிகம்.தேவை இல்லாத ஆட்டமெல்லாம் காட்டக்கூடாது.மக்கள் காசை வீணடிக்கக்கூடாது, ஆட்சி நடத்துங்கள்’என்று கூறினார்.இதற்கு முன்னதாக ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், அடுத்து உதயநிதி ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலினுக்காக ‘விக்’ சிலையை கடலில் வைப்பாரா என கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.