வன்முறை தூண்டிய வாட்ஸ் அப் அட்மின்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியாமூர் சக்தி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை, கலவரம் குறித்து, சிறப்பு புலனாய்வு பிரிவு மற்றும் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக, இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த விசாரணையில் சில சமூக விரோதிகள், வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இதற்காகவே குழுக்களை அமைத்து ஆட்களை திரட்டி இருப்பது தெரியவந்துள்ளது. வன்முறையாளர்களையும் சமூக விரோதிகளையும் வாட்ஸ் அப் குழுக்கள் வாயிலாக ஒருங்கிணைத்த, அதன் ‘அட்மின்’கள், கடலுார் மாவட்டம், சேப்பாக்கத்தை சேர்ந்த விஜய், கள்ளக்குறிச்சி மாவட்டம், துருவூரைச் சேர்ந்த துரைப்பாண்டி, காச்சக்குடியைச் சேர்ந்த அய்யனார் ஆகியோரை சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.