கலமசேரி பேருந்து எரிப்பு வழக்கு

எர்ணாகுளம். கேரளாவில் கடந்த 2005ல் எர்ணாகுளத்தில் இருந்து சேலத்திற்கு சென்று கொண்டிருந்த தமிழக அரசுப் பேருந்தை கலமசேரி என்ற பகுதியில் எரித்து சேதப்படுத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உம்மர் ஹாஜி, சபீர் புஹாரி, தாஜுதீன் ஆகிய அந்த மூன்று முஸ்லிம் பயங்கரவாதிகளும் குற்றவாளிகள் என கேரளாவின் எர்ணாகுளம் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  குற்றம் சாட்டப்பட்ட இவர்கள், சிறையில் உள்ள அப்துல் மதானியின் தொடர் காவலுக்கு பழிவாங்கும் வகையில் கடந்த 2005 செப்டம்பர் முதல் வாரத்தில் தேசத்திற்கெதிரான போர் நடத்துவதற்கும், பயங்கரவாதத் தாக்குதலை நிகழ்த்துவதற்கும் அரசை சீர்குலைப்பதற்கும் சதி செய்தது விசாரணைகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான தண்டனைகள் 01.08.2022 அன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.