பாரதத்தின் மற்றொரு மாணிக்கம்

உலக வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநராக பாரதத்தைச் சேர்ந்த இன்டர்மிட் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பதவியை அலங்கரிக்கும் இரண்டாவது பாரத தேசத்தவர் இவர். இதற்கு முன்பாக கௌஷிக் பாசு, 2012 முதல் 2016ம் ஆண்டுவரை தலைமைப் பொருளாதார வல்லுநராக நியமிக்கப்பட்டு இருந்தார்.அதன்பின் தற்போது கில் நியமிக்கப்படுகிறார். இது தவிர சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநராக பாரதத்தை சேர்ந்த ரகுராம் ராஜன், உலக வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் ஆகியோரும் நியமிக்ககப்பட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது. உலக வங்கியின் தலைமைப் பொருளாதார வல்லுநராக நியமிக்கப்பட்டுள்ள இன்டர்மிட் கில்லுக்கு 20 ஆண்டுகாலம் உலக வங்கியில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. உலக வங்கியின் தலைமைப் பொருளாதார அலுவலகத்தில் மேம்பாட்டுக் கொள்கை வடிவமைப்பு இயக்குநராக, ஐரோப்பிய, மத்திய ஆசியாவுக்கு தலைமைப் பொருளாதார வல்லுநராக கில் பணியாற்றியுள்ளார். 2009ம் ஆண்டு பொருளாதார புவியியல் குறித்த உலக மேம்பாட்டு அறிக்கையை கில் தயாரித்து அளித்துள்ளார். அதில், குறிப்பிட்ட அளவு வருமான நிலையை வளரும் நாடுகள் அடைந்தபின் எவ்வாறு தேக்கமடைகின்றன என்ற அவரின் அறிக்கை மிகப் பிரபலமானதாகும். பொருளாதார நோபல் பரிசு வாங்கிய கேரி பெக்கர், ராபர்ட் லூகாஸின் மாணவர்தான் கில். சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற கில், டெல்லி பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் பயின்றவர். சிகாகோ பல்கலைக்கழகம், ஜார்ஜ்டவுன் பல்கலைக் கழகத்தில் கௌரவப் பேராசிரியராக கில் பணி புரிந்துள்ளார். உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாஸ் இந்த நியமனம் குறித்து கூறுகையில் “ இன்டர்மிட் கில்லுக்கு மதிப்பு மிகுந்த அனுபவம், கள அனுபவம் உள்ளது. இ்ந்த பெரிய பொறுப்பு மற்றும் பதவிக்கு கில் பொருத்தமானவராகஇருப்பார்” எனத் தெரிவி்த்தார்.