சர்ச்சில் சிறுமி பலாத்காரம்

பெங்களூரு வித்யாரண்யபுராவின் தொட்டபெட்டஹள்ளி அருகில் காவேரி லே அவுட்டில் கிறிஸ்தவ சர்ச் ஒன்று உள்ளது. அதன் அருகில் வசித்து வந்த தம்பதி, பணிக்கு செல்வதற்கு முன், தங்கள் 6 வயது மகளை சர்ச்சில் சைமன் பீட்டர் என்பவரிடம் விட்டு செல்வதும் பணி முடிந்து, மகளை தங்கள் வீட்டுக்கு அழைத்து செல்வதுமாக இருந்தனர். இதனை பயன்படுத்திக்கொண்ட சைமன் பீட்டர், சிறுமிக்கு ஆபாச படங்களை காட்டி பலாத்காரம் செய்தார். இது குறித்து வெளியே கூறக்கூடாது என சிறுமியை மிரட்டி, சிறுமி 14 வயது ஆகும் வரை இந்த கொடுமையை நிகழ்த்தியுள்ளார் சைமன் பீட்டர். இதனால் வேதனையடைந்த சிறுமி, அதே சர்ச்சில் உள்ள மற்றொரு நபரான சாமுவேல் டிசோசா என்பவரிடம் தெரிவித்தார். அவரும் இதை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு சிறுமியை மிரட்டி, இரண்டு ஆண்டுகளாக பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர், சாமுவேல் டிசோசாவை எச்சரித்தனர். இந்த வேதனைகளால் மன அழுத்தத்தில் இருந்த சிறுமிக்கு ஆலோசனையும், சிகிச்சையும் அளிக்கப்பட்டது. தற்போது பூரண குணமடைந்து 18 வயது நிரம்பிய அந்தப் பெண் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். பாலியல் பலாத்காரம் செய்த இருவரையும் அதனை மூடி மறைக்க முயற்சித்த ஆறு பேர் குறித்தும் தெரிவித்தார். இதையடுத்து, பலாத்காரம் செய்த இருவர் மீது ‘போக்சோ’ வழக்கையும் சம்பவத்தை மூடி மறைக்க முயற்சித்த ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகிறது.