அறநிலையத்துறை ஆணையருக்கு அபராதம்

சென்னை சூளையில் உள்ள சொக்கவேல் சுப்பிரமணியர் கோயிலுக்கு சொந்தமான சொத்துகளுக்கான வாடகை பாக்கி வசூலிக்கக்கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதில், தனி நபர்களுக்கு எதிரான நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் என்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால்,இந்த உத்தரவை ஹிந்து சமய அறநிலையத்துறை அமல்படுத்தவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. மேலும், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது. அபராத தொகையை இரு வாரங்களில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.