இதுதான் தி.மு.கவின் திராவிட மாடல்

மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “மக்கள் விரோத ஆட்சியைக் கண்டித்து நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர். எல்லா வரியையும் உயர்த்திய ஒரே அரசு தி.மு.க தான். கொரோனா காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டாலின் சிறிதும் இரக்கம் இல்லாமல் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலிலதா 100 யூனிட் இலவச மின்சாரம் கொடுத்தார். ஆனால் தற்போது 12 முதல் 52 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதியைக் கொடுத்தா தி.மு.க ஆட்சிக்கு வந்தது? ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு. இதுதான் தி.மு.கவின் நிலை. இதுதான் தி.மு.கவின் திராவிட மாடல்” என்று பேசினார்.