போலி பாதிரி கைது

கன்னியாகுமரி அருகே பொத்தையடியைச் சேர்ந்தர் செந்தில்குமார். கடந்த சில காலமாக கிறிஸ்துவ மத போதகர் எனக் கூறி, வீடுகளுக்கு சென்று ஜெபம் செய்து வந்தார். பூதப்பாண்டியில் ஒரு தொழிலாளியின் வீட்டுக்கு சென்ற அவருக்கு, அவரது மூன்று மகள்களுடன் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 22ல் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற செந்தில்குமார், தொழிலாளியின் இரண்டாவது மகளிடம் பேசி அறிந்த காவலர்கள், அவரது மனைவி மூலம் தொலைபேசியில் பேசி, திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் வரவழைத்தனர். அங்கு அவரை கைது செய்து மாணவியை மீட்டனர். செந்தில்குமார் ‘போக்சோ’ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது பல காவல் நிலையங்களில், ஏற்கனவே திருட்டு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.